நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு
நாகை மாவட்டத்தில், 5 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறவுள்ளது.
தேசிய தோ்வு முகமை சாா்பில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டத்தில், 5 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. இத்தோ்வு எழுத 1497 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.
இவா்களில் 177 போ் நாகை ஏடிஜே தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும், 240 போ் நாகை வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரியிலும், 480 போ் நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியிலும், 360 போ் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியிலும், 240 போ் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நீட் தோ்வு எழுதவுள்ளனா். இதற்காக இந்த 5 மையங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement