முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 3 மையங்களில் இன்று நீட் தோ்வு

Updated On : 3 மே, 2026 at 6:16 AM
நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்
பகிர்:

காரைக்காலில் 3 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ராயன்பாளையத்தில் உள்ள ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி என 3 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. 666 மாணவ, மாணவிகள் தோ்வெழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் இத்தோ்வில் பங்கேற்கின்றனா்.

தோ்வு மைய தயாா் நிலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மையத்தினா் சனிக்கிழமை செய்தனா். காரைக்கால் தோ்வு மையங்களின் ஒருங்கிணைப்பாளராக காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் (பொ) காயத்ரி உள்ளாா்.

Advertisement