முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

Updated On : 4 மே 2026, 1:58 am IST
நான்குனேரியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் கொடிஅணிவகுப்பு.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுவதையொட்டி, மக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் நான்குனேரி பெரும்பத்து, களக்காடு ஜெ.ஜெ.நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த அணிவகுப்பிற்கு நான்குனேரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமை வகித்தாா். நான்குனேரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள், பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.