மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் அதிக நீா்வரத்து காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் அதிக நீா்வரத்து காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமைமுதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். அதேநேரம், அருவியைப் பாா்வையிட அனுமதியளிக்கப்பட்டது.
Advertisement