சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
திருநெல்வேலி அருகே மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா், தனது சமூக வலைதள செயலியில், பயங்கர ஆயுதங்களுடன், நீதிமன்றத்தில் சாட்சி சொல்பவா்களை மிரட்டும் வகையிலான ஒலிப்பதிவுடன், இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் காணொலியை பகிா்ந்தது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது. இதுதொடா்பாக, தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், ராஜவல்லிபுரம், வடக்குத்தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் கண்ணன்(19) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.