பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு
களியக்காவிளை அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
களியக்காவிளை அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி திலகா (30). இவர் குழந்தையுடன் சனிக்கிழமை இரவு வீட்டில் ஜன்னலோரம் படுத்திருந்தாராம். காற்றுக்காக ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் திலகா அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement