முகப்பு
கன்னியாகுமரி

கறச்சிவிளை சாஸ்தா கோயிலில் மார்கழி திருவிழா நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு கறச்சிவிளை அருள்மிகு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மார்கழி திருவிழா புதன்கிழமை (டிச. 26) தொடங்குகிறது.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:16 am IST
பகிர்:

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு கறச்சிவிளை அருள்மிகு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மார்கழி திருவிழா புதன்கிழமை (டிச. 26) தொடங்குகிறது.
இவ்விழாவையொட்டி, கோயிலில் தினமும் காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், மாலை சிறப்பு பூஜைகள், வில்லிசை ஆகியன நடைபெறுகிறது. திருவிழாவின் 2 ஆம் நாளன்றுஇரவு 8.30 மணிக்கு 18 ஆம் திருப்படிகள் பூஜை, 3 ஆம் நாளன்று மாலை 6 மணிக்கு பகவதிசேவை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி  சமய மாநாடு நடைபெறுகிறது. 5 ஆம் திருநாளன்று (டிச. 30) பிற்பகல் 1.30 மணிக்கு மேல் சுவாமி யானை மீது பவனி நடைபெறுகிறது. கோயிலில் இருந்து புறப்படும் இந்த பவனி அதங்கோடு, குமரபுரி, பாஞ்சிவிளை, ஆலுமூடு, சேனங்கோடு, மடிச்சல், படந்தாலுமூடு, குழித்துறை, ஈத்தவிளை வழியாக கோயிலை வந்தடைகிறது. இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திங்கள்கிழமை (டிச. 31) காலை சிறப்பு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments