பளுகல் அருகே நாகர் சிலை சேதம்
பளுகல் அருகே நாகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பளுகல் அருகே நாகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பளுகல் அருகேயுள்ள இடைக்கோடு பகுதியில் நாகராஜா காவு ஒன்று உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் நாகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பக்தர்கள் அங்கு சென்றபோது, அங்கிருந்த நாகர் சிலைகளில் ஒன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகி சுரேஷ், பளுகல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.