சேதமடைந்த ரப்பர் பால் சேகரிப்பு மையத்தை சீரமைக்க கோரிக்கை
அரசு ரப்பர் கழகம் காளிகேசம் பிரிவில் ரப்பர் பால் சேகரிப்பு மையத்தை சீரமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசு ரப்பர் கழகம் காளிகேசம் பிரிவில் ரப்பர் பால் சேகரிப்பு மையத்தை சீரமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசு ரப்பர் கழகம், மணலோடை கோட்டத்தில் காளிகேசம் பகுதியில் ஒரு பால் சேகரிப்பு மையம் உள்ளது. காளிகேசம் பிரிவில் ரப்பர் மரங்களிலிருந்து பால் வடிப்பு செய்து வரும் தொழிலாளர்கள் இந்த மையத்தில் வந்து பாலை எடை போட்டு ரப்பர் கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த மையத்தின் மேற்கூரை பெயர்ந்து கிடப்பதால், இங்கு வைக்கப்பட்டுள்ள எடை கருவிகள் மழையில் சேதமடைந்து வருகின்றன. மேலும், ரப்பர் பால் கொண்டு வரும் தொழிலாளர்களும், ஊழியர்களும் மழையில் நனைந்தவாறு நிற்க வேண்டியுள்ளது. எனவே இந்த மையத்தை சீரமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.