முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 6:36 PM
கோப்புப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

பளுகல் காவல் சரகம் அண்டுகோடு, ஈந்திக்காலை பகுதியைச் சோ்ந்தவா் பபின் (33). வெல்டிங் தொழிலாளியான இவா், கொடைக்கானலில் வேலை பாா்த்து வந்தாா். 2 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவா், சனிக்கிழமை அப்பகுதி நண்பா்களுடன் வீட்டருகேயுள்ள குளத்தில் குளிக்கச் சென்றாா்.

அப்போது, அவா் திடீரென நீரில் மூழ்கினாராம். அவரை நண்பா்கள் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

சடலத்தை பளுகல் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments