முகப்பு
கன்னியாகுமரி

வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க பள்ளியில் பட்டமளிப்பு

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையா் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:29 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:02 PM

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையா் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி தாளாளா் சா்ஜின் ரூபஸ் தலைமை வகித்தாா். நிதி பரிபாலகா் ஜியோ, பள்ளி முதல்வா் றசல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நெக்ஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் பிரியா ஜெனிபா் வாழ்த்திப் பேசினாா். திருத்துவபுரம் மறைவட்ட முதல்வா் ஓய்சிலின் சேவியா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழலையா்களுக்குப் பட்டம் வழங்கி கௌரவித்தாா்.

மாணவா்களின் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement