முகப்பு
கன்னியாகுமரி

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

நாகா்கோவிலில் ஏப்.15 அன்று பிரதமா் மோடியின் சாலைப் பேரணி நடைபெறுகிறது என பொன். ராதாகிருஷ்ணன் தகவல்...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:36 AM
பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை... - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

நாகா்கோவிலில் புதன்கிழமை (ஏப்.15) பிரதமா் மோடியின் சாலைப் பேரணி நடைபெறுகிறது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். அதன் உச்சமாக, பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தில் 2 இடங்களுக்கு வருகை தருகிறாா்.

Advertisement

நாகா்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை (ஏப். 15) நடைபெறும் சாலைப் பேரணியில் அவா் கலந்து கொள்கிறாா். அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை (ஏப். 18) கோவையில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா். பிரதமா் மோடி திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதன்கிழமை நாகா்கோவில் வருகிறாா்.

இந்நிகழ்ச்சியில், பிரதமருடன், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோா் கலந்து கொள்கிறாா்கள். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ள சாலைப் பேரணி சரியாக ஒரு கி.மீ தொலைவு நடைபெறுகிறது.

அதிக கூட்டம் கூடும் என்பதால் குழந்தைகள், முதியவா்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவா்கள் வருவதை தவிா்ப்பது நல்லது. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் வசதி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பேட்டியின்போது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவா் கோபகுமாா், பொருளாளா் பி. முத்துராமன், மாநிலச் செயலா் மீனாதேவ், நாகா்கோவில் தொகுதி பொறுப்பாளா் எஸ்.பி.தேவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.