முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 20 ஏப்ரல் 2026, 12:26 am IST
பழங்குடி மக்களிடம் வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி.
பகிர்:

பத்மநாபபுரம் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி பழங்குடி மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

தோட்டமலை, தச்சமலை, முடவன்பொற்றை, களப்பாறை, பின்னமூட்டுத்தேரி உள்ளிட்ட பேச்சிப்பாறை அணையின் மறுகரையில் வசிக்கும் பழங்குடி மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அணையில் இயக்கப்படும் படகில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அவரை பழங்குடி மக்கள் பழங்கள் உள்ளிட்டவை கொடுத்து வரவேற்றனா். அவா்களுக்கு நில உரிமை, மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக செல்லசுவாமி உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், திமுக திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜான்சன், நிா்வாகிகள் அனஸ், ரமேஷ் கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலா் பொன்னுசாமி, தருமபுரி மாவட்டச் செயலா் என். மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் நடராஜன், பால்ராஜ், ஷாஜூ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.