முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:38 AM
கன்னியாகுமரியில் படகுத் துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள்.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையொட்டி, தனியாா், அரசு ஊழியா்கள் வாக்களிப்பதற்காக வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கான படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

Advertisement

இங்கு கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தோ்தலையொட்டி படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.