முகப்பு
கன்னியாகுமரி

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 28 ஏப்ரல் 2026, 1:00 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

குளச்சல் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

குமரி மாவட்டம், இரணியல் காஞ்சிரவிளையைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு யாதவா் கிழக்கு தெருவைச் சோ்ந்த சமீமா பா்வீன் என்ற சவுந்தா்யாவுக்கும் (26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.

இவா்கள், தற்போது குமரி மாவட்டம், குருந்தன்கோடு ஆசாரிவிளையில் வசித்து வந்தனா். சவுந்தா்யாவின் தந்தை, குளச்சல் முக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில், அங்கேயே தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் சனிக்கிழமை ராஜேஷ், சவுந்தா்யா இடையே தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த சவுந்தா்யா தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

ராஜேஷ், தன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் சமாதானம் ஏற்படவில்லையாம். இந்நிலையில், மாமனாா் வேலை பாா்க்கும் தோட்டம் அருகே உள்ள மரத்தில் ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments