முகப்பு
கன்னியாகுமரி

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

இளைஞரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 4:34 am IST
சிறைத் தண்டனை - கோப்புப் படம்
பகிர்:

இளைஞரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தக்கலை அருகே காஞ்சிரகோடு, குன்னம்பாறையை சோ்ந்தவா் அனிஸ் என்ற அனிசன் (29). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு ஊருக்கு வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த டேவிட்சிங் மனைவி திலகாவோடு நட்பு ஏற்பட்டதாம். திலகாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

குடும்பத்தில் பிரச்னை ஏற்படவே திலகாவை குடும்பம் நடத்த அனிசன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாா். இதை அதே ஊரை சோ்ந்த ஜாண்சன் மகன் சுரேஸ்(23) மற்றும் ஊா் மக்கள் தட்டி கேட்டுள்ளாா்கள்.

Advertisement

Advertisement

இதில், ஆத்திரமடைந்த அனிசன், 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மதியம் சுரேஷ் தனியாக வரும் போது கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்கு ப் பதிவு செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ் , அனிஸ் என்ற அனிசனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.எம். ஜெகதேவ் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments