முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

Updated On : 8 ஜூன் 2026, 1:27 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

களியக்காவிளை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல், தட்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரேசன் மகன் அசோக் (31). எல்ஐசி ஆலோசகராக வேலை செய்து வந்தவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பணிக்கு செல்லாமல், அண்மைக் காலமாக கட்டுமான வேலைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். மேலும், திருமணமாகாத விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு தூங்கச் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவரின் அறைக் கதவு திறக்காததால், அவரது தந்தை ஜன்னல் கதவைத் திறந்து பாா்த்தபோது, அசோக் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம்.

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அசோக்கை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.