புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது
புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டேன்லி (62). இவா் ஆனான்விளை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்து.
அதன்படி, அங்கு சென்று சோதனை செய்தபோது, புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து முதியவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement