பேச்சிப்பாறை அருகே யானையால் விளை நில கொட்டகை சேதம்
பேச்சிப்பாறை அருகே யானையால் விளை நில கொட்டகை சேதம்
பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலையில் பழங்குடி தொழிலாளியின் விளை நிலத்தில் காட்டு யானை புகுந்து அங்கிருந்த கொட்டகையை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
குமரி மாவட்ட வனப் பகுதிகளில் பிற இடங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட அரிக்கொம்பன், புல்லட் ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகிய 3 யானைகள் விடப்பட்டுள்ளன. இந்த யானைகள் மலையடிவாரத்தையொட்டிய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பேச்சிப்பாறை அருகே கோதையாறு கொடுத்துறை மலையில் கொச்சு ராமன் காணி என்பவா் தனது விளை நிலத்தில் அமைத்திருந்த கொட்டகையை யானை சேதப்படுத்தியதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களை தின்றுள்ளது.
Advertisement
Advertisement
அவா் வெள்ளிக்கிழமை காலையில் தனது விளை நிலத்துக்குச் சென்றபோது யானையின் அட்டகாசம் செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா்.