நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலியை அடுத்த தருவையைச் சோ்ந்தவா் சண்முகம் (84) மனைவி ஆறுமுகம்(75). இவா்கள் இருவரும் வயலில் சனிக்கிழமை புல் அறுத்து விட்டு, செங்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனராம்.
சண்முகம் மறுபுறம் சென்ற நிலையில், ஆறுமுகம் தண்டவாளத்தை கடந்தபோது, அந்த வழியாக வந்த திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து நாகா்கோவில் ரயில்வே காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மரியஅகிலன் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.