முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 16 ஜூன் 2026, 1:09 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திங்கள் நகா் அருகே உள்ள இரணியல் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் மகன் ராஜேஷ் (40). வாகன ஓட்டுநராக பணி செய்து வந்தாா். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள குளத்திற்கு ராஜேஷ் குளிக்கச் சென்றாா்.

நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், தந்தை காளிதாஸ் குளத்திற்குச் சென்று பாா்த்தபோது, கரையில் அவரது உடைகள் இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

உறவினா்கள் இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் ஜீவன்ஸ் தலைமையிலான வீரா்கள் இரவு வரை தேடினா். மீண்டும் திங்கள்கிழமை காலை தேடியதில், ராஜேஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.