ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
இரணியலில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இரணியலில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் செக்கால தெருவைச் சோ்ந்தவா் மகாதேவன் ( 41). தொழிலாளியான இவா், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி திங்கள்நகரில் இருந்து இரணியலுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வலிப்பு ஏற்பட்டு ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement