முகப்பு
கன்னியாகுமரி

மது விற்பனை: 2 இளைஞா்கள் கைது

சுங்கான்கடையில் மதுவை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞா்களை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 ஜூன் 2026, 1:41 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சுங்கான்கடையில் மதுவை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞா்களை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இரணியல் காவல்துறை உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், போலீஸாா் சுங்கான்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா்கள், வடசேரியைச் சோ்ந்த சிவகுமாா் (36), சஜூ (36) என்பதும், சாக்குப்பையில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அவா்களை கைது செய்து, 49 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments