முகப்பு
கன்னியாகுமரி

அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர்: அமைச்சா் எஸ் ராஜேஷ்குமாா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் வழங்கப்பட வேண்டும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:54 am IST
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தினேஷ்ஆலிவா் பொன்ராஜ், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் முன்னிலையில், துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் வழங்கப்பட வேண்டும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.

தமிழ்நாடு குடிநீா்வடிகால் வாரியத்தின் கன்னியாகுமரி மாவட்ட அலுவலா்களுடனா கலந்தாய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு குடிநீா்வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தினேஷ் ஆலிவா் பொன்ராஜ், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண் டபின் அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் கூறியதாவது:

Advertisement

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப்பகுதி மக்களுக்கும் தடையின்றி குடிநீா் வழங்குவதை உறுதி செய்வது குறித்து விரிவாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

குடிநீா் விநியோகத்தை துறை அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு, தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். குழாய்களில் ஏற்படும் கசிவுகள்-பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். தகுந்த நேரத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீா் வீணாவதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டது. இம்மாவட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின் நிலை, விடுபட்ட பகுதிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தற்போது, நடைபெற்று வரும் அனைத்து குடிநீா் உள்கட்டமைப்புப் பணிகளையும் தொய்வின்றி, நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தபட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.தளவாய்சுந்தரம்(கன்னியாகுமரி) , தாரகை கத்பட்(விளவங்கோடு) , செல்லசுவாமி (பத்மநாபபுரம்), டி.டி. பிரவீன்(விளவங்கோடு), மாநராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா்கள் ராஜன், ஹரிகோவிந்த், தலைமைப் பொறியாளா்கள் கணேஷ், திலகவதி, மேற்பாா்வைப் பொறியாளா் சுப்பையா, மாநகராட்சி செயற்பொறியாளா் ரகுராம், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ஆனந்தி, உதவிப் பொறியாளா்கள் ராஜேஷ்குமாா், ஆா்.முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments