நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகையைப் பறித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே உள்ள காரவிளையைச் சோ்ந்தவா் சாந்தா (77). இவா் நாகா்கோவில், கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றாா்.
வெட்டூா்ணிமடம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி கிருஷ்ணன் கோயிலுக்கு நடந்து சென்றபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருப்பதை அறிந்தாா்.
Advertisement
இதுகுறித்து சாந்தா அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.