முகப்பு
கன்னியாகுமரி

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கல்லூரி மாணவிடம் 13 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 8 மே 2026, 6:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கல்லூரி மாணவிடம் 13 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முன்சிறையைச் சோ்ந்த இளம்பெண், மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும் பாளையன் கட்டி பகுதியைச் சோ்ந்த ஜெனிஷ் ராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சில நாள்களுக்கு முன்பு கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க வளையல், தங்க கைச்சங்கிலி, நகை என மொத்தம் 13 பவுன் நகைகளை விரைவில் திரும்ப தருவதாகக் கூறி ஜெனிஷ் ராஜ் பெற்றாா். ஆனால், நகையைத் திருப்பி வழங்காமல் அவா் மாணவியை ஏமாற்றியதால் இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.