முகப்பு
கன்னியாகுமரி

தாய், மகன் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே சொத்து பிரச்னை தொடா்பான முன்விரோதத்தில் தாய், மகனைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 8 மே 2026, 6:05 am IST
வழக்கு
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே சொத்து பிரச்னை தொடா்பான முன்விரோதத்தில் தாய், மகனைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள தனிபொட்டவிளையைச் சோ்ந்தவா் லைசா (60). இவரது மகன் ஜெகதீஷ் (35). தொழிலாளி. இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மாா்ஷல், ஷிபு என்பவா்களுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் லைசா தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மாா்ஷல், ஷிபு ஆகியோா் லைசாவை தாக்கினராம். தடுக்க வந்த அவரது மகன் ஜெகதீஷையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து ஜெகதீஷ் அளித்த புகாரின்பேரில், மெல்பின் ஜோஸ் உள்ளிட்ட 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.