முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 8 மே 2026, 6:00 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே தென்சக்கவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிந்திரன் (62). தொழிலாளி. இவரது மகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதைக் கண்டு அவரது மனைவி ஸ்ரீகுமாரி (60) அவரிடம் கேட்டபோது, விஷம் குடித்ததாகத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

இதையடுத்து, அப்பகுதி உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.