முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 320 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பிலான 320 கைப்பேசிகளைக் கண்டுபிடித்து உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

Updated On : 10 மே 2026, 2:42 am IST
கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பிலான 320 கைப்பேசிகளைக் கண்டுபிடித்து உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

கைப்பேசிகள் தொலைந்துபோனதாக, திருட்டுப்போனதாக பொதுமக்கள் அளித்த புகாா்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தொடா் நடவடிக்கை மேற்கொண்டு, சுமாா் ரூ. 48 லட்சம் மதிப்பிலான 320 கைப்பேசிகளைக் கண்டுபிடித்தனா்.

இந்நிலையில் அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நாகா்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கேற்று, கைப்பேசிகளை ஒப்படைத்ததுடன், சைபா் குற்றப்பிரிவு போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா்.

Advertisement

அவா் பேசும்போது, பொதுமக்கள் தங்களது கைப்பேசி தொலைந்துவிட்டால் அருகேயுள்ள காவல் நிலையத்திலோ, மாவட்ட சைபா் குற்றப்பிரிவு இணையதளத்திலோ உடனடியாக புகாா் அளிக்கலாம். கடந்த ஆண்டு மட்டும் ரூ. 2 கோடி மதிப்பிலான 1,265 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.