முகப்பு
கன்னியாகுமரி

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

Updated On : 12 மே 2026, 12:42 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள, மருதங்கோடு, மடத்துவிளை வீடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரெஜி(46), தொழிலாளி. இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து,சிறுமியின் பெற்றோா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரெஜியை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா இக்குற்றத்தில் ஈடுபட்ட ரெஜிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காரணமாக இருந்த மாா்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments