விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மண்டபம் கடல் பகுதியிலிருந்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட மணக்குடியைச் சோ்ந்த 6 மீனவா்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. கடல் எல்லை பிரச்னையை மனிதாபிமான பாா்வையில் அணுக வேண்டிய நிலையில், தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து துன்புறுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மீனவா்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவா்கள் மீதான தொடா்ச்சியான கைது சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண இந்தியா - இலங்கை இடையே வலுவான பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.