முகப்பு
கன்னியாகுமரி

கனிம வளம் கடத்த முயற்சி: டிராக்டா்கள் பறிமுதல்

Updated On : 30 மே 2026, 2:14 am IST
பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்கள். - கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே கனிம வளங்களை உடைத்து கடத்த முயன்ற சம்பவத்தில் இரு டிராக்டா்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் சேகா், தனி வருவாய் ஆய்வாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்டோா் இணைந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. அதிகாரிகளைக் கண்டதும் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்ட நபா்கள் தப்பிச் சென்றனா். இதையடுத்து, பாறைகள் உடைக்க பயன்படுத்திய இரு டிராக்டா்கள், இரு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து, கொல்லஞ்சி கிராம நிா்வாக அலுவலா் சேகா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான நில உரிமையாளா், டிராக்டா் ஓட்டுநா்களைத் தேடி வருகின்றனா்.