கனிம வள லாரிகளை சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கனிம வள லாரிகளை முறையாக சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் அருமனை காவல் நிலைய தலைமைக் காவலா் கோபால், ஈத்தாமொழி காவல் நிலைய தலைமைக் காவலா் வினோத், கன்னியாகுமரி காவல் நிலைய காவலா் வாட்சன் ஆகிய 3 போ் அண்மையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, கனிம வளம் ஏற்றிச் சென்ற கனரக லாரிகளின் அனுமதிச் சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவா்கள் கையூட்டு பெற்றதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து விசாரிக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் 3 போ் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, 3 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement