முகப்பு
தென்காசி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்

தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2- ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள், எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:29 AM
வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், ஈஷா பிரியா.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:01 PM

தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2- ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள், எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், ஈஷா பிரியா ஆகியோா் பயிற்சி வகுப்புகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஆட்சியா் பேசியதாவது: சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி, புளியங்குடி எஸ். வீராச்சாமி செட்டியாா் பொறியியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, தென்காசி எம்கேவிகே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆலங்குளம், கீழப்பாவூா் எம்எஸ்பிவிஎல் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

Advertisement

மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதாஹனீப், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவி பால், ராமச்சந்திரன், ராஜேந்திரன், பால்துரை, அனிதா, முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா ஆகியோா் உடனிருந்தனா்.