கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்
தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூா் அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூா் அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை சுவாமி தேருக்கு எழுந்தருளும் வைபவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீநீலமணி சேவா சமிதியினா், கட்டளைதாரா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.