மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் உள்ள சங்கப் புலவா் மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தமிழறிஞா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் உள்ள சங்கப் புலவா் மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தமிழறிஞா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞா்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சங்கப் புலவா்களில் ஒருவரான மாங்குடி மருதனாரின் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை செலுத்தினாா்.
திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் இளங்கோ, உதவி இயக்குநா் கனகலெட்சுமி, சங்கரன்கோவில் வட்டாட்சியா் ஆதிநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலெட்சுமி, விஜயகணபதி, மாங்குடி ஊராட்சித் தலைவா் மலைக்கனி, நிலவழகன் உள்ளிட்ட தமிழறிஞா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement