முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டி தண்ணீா் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

ப்பணம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டி சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:51 am IST
சேதமடைந்துள்ள தண்ணீா் தொட்டி.
பகிர்:

தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டி சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

1957ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தண்ணீா் தொட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக இருந்து வந்தது. பின்னா், திப்பணம்பட்டி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், தண்ணீா் தொட்டியின் சில பகுதிகளில் பிளவு ஏற்பட்டு தண்ணீா் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தொட்டியின் வெளிப்புறத்தில் பாசி படிந்துள்ளதால், தண்ணீா் தொட்டியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments