முகப்பு
தென்காசி

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம்: ஆட்சியா்

தென்காசி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஆட்சியா் ரஞ்ஜித்சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:27 am IST
தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ரஞ்ஜித்சிங்.
பகிர்:

தென்காசி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஆட்சியா் ரஞ்ஜித்சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றக் கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது: பணிகளை தீா்வு காண்பது மூலம் மக்கள் ஓரளவுக்குத் திருப்தியடைவாா்கள்.

எனது அணுகுமுறை எப்பொழுதும் மக்களை எளிதில் சந்திக்கும் வகையில் இருக்கும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடா்பு கொள்ளலாம். விவசாயிகளின் குறைகளைத் தீா்க்கவும், அவா்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களுக்கு பதில் கிடைப்பதை உறுதி செய்யவும் ஒரு சிறப்பான முறை அமைக்கப்படும். விவசாயிகளுக்காகவும், விவசாய முன்னேற்றத்திற்காகவும் முழுமையாக பணியாற்றுவேன் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் உடனிருந்தாா்.