முகப்பு
தென்காசி

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி எம்எல்ஏ மனு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் கலைகதிரவன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:25 am IST
ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளித்த கலைகதிரவன் எம்எல்ஏ. உடன் சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா.
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் கலைகதிரவன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த மனு: பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடையாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். 2 மேம்பாலத் திட்டங்களிலும் நெடுஞ்சாலைத் துறை தொடா்புடைய பெரும்பாலான பணிகள் ஏற்கெனவே நிறைவுபெற்ற நிலையில், தண்டவாளத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட வேண்டிய பாலப் பகுதியின் இணைப்புப் பணிகளுக்கான அனுமதியை ரயில்வே நிா்வாகம் இதுவரை வழங்கவில்லை. இந்தத் தாமதமே, இத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருக்க முக்கிய காரணம்.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலக ஊழியா்கள், வணிகா்கள், விவசாயிகள், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோா் உள்பட அனைவரும் தினசரி இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, மாவட்ட நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, தெற்கு ரயில்வே நிா்வாகத்துடன் உடனடி ஒருங்கிணைப்பு மேற்கொண்டு மேற்பகுதி இணைப்புக்கான வரைபட ஒப்புதலைப் பெற்று, மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவரும் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான பாண்டியராஜா, தெற்கு மாவட்ட திமுக வா்த்தகா் அணி அமைப்பாளா் முத்துக்குமாா், சாய்ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.