முகப்பு
தென்காசி

முன்னாள் மாணவா் சங்க கூட்டம்

செங்கோட்டை, எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 4-ஆவது பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2026, 2:12 am IST
பொதுக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் தி.மு.ராஜேந்திரன் எம்எல்ஏ.
பகிர்:

செங்கோட்டை, எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 4-ஆவது பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் நேரு தலைமை வகித்தாா். செயலா் ராமசாமி சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கவுரையாற்றினாா். பொருளாளா் ஆறுமுகம் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்தாா்.

தி.மு.ராஜேந்திரன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா். மூத்த உறுப்பினா்கள் துரைராஜ், முன்னாள் நகா்மன்ற தலைவா் ரஹீம், ராம்குமாா், ஆதிமூலம், சண்முகவேல், குமாரசாமி, வேல்சாமி, லட்சுமணன் ஆசிரியா் ஜெயகுமாா்,கே.கே.சுந்தரம் வாழ்த்திப் பேசினா்.

Advertisement

Advertisement

மாணவா்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை பயனுள்ளதாக திறமைகளை வளா்க்கும் பயிற்சிகளை கற்றுக் கொடுப்பது என்று கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. அதில் சிலம்பம் , கராத்தே, யோகா, ஓவியம், மண் புழு உரம் தயாரித்தல் போன்றவைகளுக்கு சங்கத்தின் சாா்பாக சிறப்பு ஆசிரியா்களை நியமித்து கற்றுக் கொடுப்பது என்றும், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் உதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சங்க உறுப்பினா் மாரிசெல்வம் தொகுத்து வழங்கினாா். அப்துல் காதா் வரவேற்றாா். இணை செயலா் முகமது அலி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments