புளியறை சோதனைச் சாவடியில் ரூ. 1.95 லட்சம் பறிமுதல்
தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதா் தலைமையில் உதவி ஆய்வாளா் முத்துகணேஷ் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, இந்தப் பணம் சிக்கியது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.