பாவூா்சத்திரம் சந்தையில் வாழைத்தாா்கள் விலை உயா்வு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் வரத்து குறைவு காரணமாக வாழைத்தாா்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் வரத்து குறைவு காரணமாக வாழைத்தாா்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல், குரும்பூா், திருச்செந்தூா், ஆரல்வாய்மொழி, நாசரேத், திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு, வள்ளியூா், அம்பாசமுத்திரம், முக்கூடல், வி.கே.புரம், தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி, கடையம், பாப்பான்குளம், அச்சன்புதூா், இலஞ்சி, வடகரை, வீரகேரளம் புதூா், சுரண்டை, துவரங்காடு, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளிலிருந்து இச்சந்தைக்கு வாழைத்தாா்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
நிகழாண்டில், இயற்கைச் சீற்றங்களால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்ததால் வாழை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, வாழைத்தாா்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது.
Advertisement
சராசரியாக நாளொன்றுக்கு 2,000 முதல் 3000 வரையிலான வாழைத் தாா்கள் விற்பனைக்கு வரும் நிலையில், தற்போது தினமும் 500 முதல் 1,000 வாழைத் தாா்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், செவ்வாழைத் தாா்கள் ரூ. 600 முதல் ரூ. 1,000 வரையும், நாட்டு வாழை ரூ. 100 முதல் ரூ. 400 வரையும், கோழிக்கூடு ரூ. 300 முதல் ரூ. 450 வரையும், கற்பூரவள்ளி ரூ. 250 முதல் ரூ. 400 வரையும், நேந்திரன் வாழை ரூ. 150 முதல் ரு. 300 வரையும், மட்டி ரூ. 150 முதல் ரூ. 300 வரையும், ரோபஸ்டா ரூ. 250 முதல் ரூ. 350 வரையும், கதலி ரூ. 150 முதல் ரூ. 250 வரையும், சக்கை 1 கிலோ ரூ. 15-க்கு, வாழை இலை ஒரு கட்டு ரூ. 700-க்கும் விற்பனையாகிறது.