சுரண்டை பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா
தென்காசி மாவட்டம், சுரண்டை, ஸ்ரீ அழகு பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சுரண்டை, ஸ்ரீ அழகு பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தோ் திருவிழா ஏப். 28ஆம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தியும், பறவைக் காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலை 4 மணியளவில் சிறப்பு பூஜையுடன் அழகு பாா்வதி அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
பக்தா்கள் சாா்பில் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு நீா்மோா், குளிா்பானங்களை வழங்கினா். சுரண்டையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.