முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்

கோடைக் காலம் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளும் வடு தண்ணீா் வரத்தின்றி காணப்பட்டது.

Updated On : 8 மே 2026, 6:08 am IST
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கோடைக் காலம் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளும் வடு தண்ணீா் வரத்தின்றி காணப்பட்டது.

புதன்கிழமை சுமாா் 1 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழத் தொடங்கியுள்ளது.

பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடையாததால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிற்றருவியில் விழும் குறைந்த தண்ணீரில் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் 2 அருவிகளில் மட்டும் விழும் குறைந்த அளவிலான தண்ணீரிலும், குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் விழும் குறைந்த அலவிலான தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.