குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தொடா் மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐந்தருவியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழைக் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சீசன் தொடங்கியது முதல் சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
குற்றாலம் பேரருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து 4-ஆவது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடா் மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐந்தருவியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
பழைய குற்றலாம், சிற்றருவி, புலியருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.