மேலப்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
மேலப்பாளையத்தில் பொடா சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலப்பாளையத்தில் பொடா சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு அமைப்பின் மாவட்டச் செயலர் அலிப் நிஜாம் தலைமை வகித்தார். தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் நெல்லை எம். ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், கட்சியின் மாநில அமைப்புச் செயலர் எம். ஜெய்னுல்ஆப்தீன், வழக்குரைஞரணி அணை மாநிலச் செயலர் ஏ. அப்ரர் அஹம்மது, வழக்குரைஞர்கள் எஸ்.எம்.ஏ. ஜின்னா, புகழேந்தி, பா. மோகன் ஆகியோர் பேசினர்.
கட்சியின் மாவட்ட துணைச் செயலர் பெஸ்ட் ரசூல், மாவட்ட இளைஞரணிச் செயலர் யூசுப் சுல்தான், மருத்துவ சேவை அணிச் செயலர் ஏ.கே. அப்துல்கனி, நிர்வாகிகள் மேலப்பாளையம் செய்யது, கே.ஏ. ஞானியார், ஏ.ஆர். பாதுஷா, வி.கே. அசன்மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுதிச் செயலர் அ. காஜா வரவேற்றார். பகுதித் தலைவர் தேயிலை மைதீன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.