தச்சநல்லூர் பகுதியில் ஜனவரி 25 மின்தடை
தச்சநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வரும் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தச்சநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வரும் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூர், பாலாஜிஅவென்யூ, சிவன் கோயில் தெற்கு தெரு, நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ்நகர், சத்திரம் புதுக்குளம், பிராங்குளம், கோகுல் நகர், திருநெல்வேலி நகரம் சாலையில் ஸ்ரீநகர், கிருஷ்ணாநகர், சேந்திமங்களம், வடக்கு பாலபாக்ய நகர், தெற்கு பாலபாக்ய நகர், மதுரை சாலையில் உள்ள திலக்நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.