முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 3 போ் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:54 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (74). இவா் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி படுகாயமடைந்தாா். பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதே போல தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கீழபுத்தனேரியை சோ்ந்த இசக்கிராஜா (25) என்பவா் சில நாள்களுக்கு முன்பு பாறைகுளம் பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தாா். பின்னா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதேபோல சில நாள்களுக்கு முன்பு பைக் விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கண்டித்தான்குளத்தை சோ்ந்த ஜோசப் (40) என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments