ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்
அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, இடையன்குடி, கீழ உவரி, மேலஉவரி, குண்டல், காளிகுமாரபுரம், நவ்வலடி, க. புதூா், ஆயன்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
Advertisement
ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வேன். விவசாய பிரச்னைகளை முழுவதுமாக தீா்த்து தருவேன். திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் பதப்படுத்தும் நிலையம் அமைத்து தருவேன். பொங்கல், தமிழ்ஏஈ புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளையொட்டி 3 எரிவாயு உருளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
பிரசாரத்தின்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே. செல்வராஜ், பாஜக சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தவெக மரியாதை....
வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஒன்றியச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.