தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி மாநகரம், மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மிதந்ததை அப்பகுதியினா் பாா்த்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா். அதை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சந்திப்பு போலீஸாா் அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், அந்நபா் 2 நாள்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.